Category: Uncategorized
-
🌺 வரலாற்றில் இன்று
🌺 வரலாற்றில் இன்று 🌺 ஆகஸ்ட் 22 🌺 1639 – கிழக்கிந்தியக் கம்பெனியினர் தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து வாங்கிய நிலத்தில் சென்னை நகரை அமைத்தார்கள். 🌺 1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி, ‘நட்டால் மாகாணத்தில் ‘ நட்டால் இந்தியக் காங்கிரஸ் ‘ என்ற அமைப்பைத் தொடங்கினார். 🌺 ஜப்பான் – கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும்…
-
🌺 திருக்குறள் தகவல்கள்
🌺 திருக்குறள் தகவல்கள் 🌺 🌺 திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812🌺 திருக்குறளின் முதல் பெயர்-முப்பால்🌺 திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133🌺 அறத்துப்பாலில் உள்ள குறள்கள் – 380🌺 பொருட்பாலில் உள்ள குறள்கள்- 700🌺 இன்பத்துபாலில் உள்ள குறள்கள்- 250🌺 திருக்குறளில் உள்ள மொத்த குறள்கள்- 1330🌺 திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள்- 14,000🌺 திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்- அனிச்சம், குவளை🌺 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சி🌺 திருக்குறளில் இடம்பெறும் ஒரே…
-
🌺 ஜான் நேப்பியர்
🌺 ஜான் நேப்பியர் ( 1550 – 1617) 🌺 ஜான் நேப்பியர் 1550 இல் மெர்சிஸ்டான் டவர் எனும் இடத்தில் பிறந்தார்.இது இப்போது அவர் பெயரிலேயே அமைந்துள்ள நேப்பியர் பல்கலைக்கழகத்தின் மெர்சிஸ்டான் வளாகத்தின் மையப்பகுதியில் உள்ளது. மடக்கையைக் கண்டுபிடித்த ஜான் நேப்பியர் கணிதத்தைப் பொழுதுபோக்கிற்காக ஆராய்ந்தார். ஆர்க்கிமிடிசிலிருந்து இப்போதைய கணித வல்லுநர்கள் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டின் வரிசையில் ஜான் நேப்பியரும் இடம் பெறுகிறார்.
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 ரிச்சர்ட் டெடிகண்ட் ( 1831 – 1916) ரிச்சர்ட் டெடிகண்ட் என்பவர் புகழ்பெற்ற கணிதவியல் அறிஞர்களில் ஒருவராவார். இவர் மாபெரும் கணிதவியல் அறிஞர் கார்ல் பிரெடரிக் காஸ் என்பவரின் மாணவராவார்.இவர் நுண் இயற்கணிதம், இயற்கணித எண்ணியல் ஆகியவற்றில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மெய்யெண் கருத்தாக்கத்திற்கு அடித்தளத்தை அமைத்தார். கேண்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட கணவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து பயன்படுத்தியவர்களில் இவரும் ஒருவராவார். தொழில்நுட்ப கல்லூரியில் நுண்கணிதத்தை போதித்த போது உருவான டெடிகண்ட் துண்டு பற்றிய வரையறை மெய்யெண்களின்…
-
🌺 டையோபாண்டஸ்
🌺டையோபாண்டஸ் ( கி.பி.200 – கி.பி.284) அல்லது ( கி.பி.214 – கி.பி. 298) 🌺சிர்க்கா என்ற நகரத்தில் வாழ்ந்த டையோபாண்டஸ் ஒரு ஹெல்லனிஸ்டிக் கணித அறிஞர் ஆவார்.அவர் வாழ்ந்த காலம் தெளிவாகத் தெரியாததால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.பதிமூன்று நூல்கள் அடங்கிய ஒரு கணிதப்புதையலான அரித்மெடிக்கா என்ற நூல்களின் தொகுப்பினை எழுதினார். ஆனால் அவற்றில் எஞ்சியுள்ளவை முதல் ஆறு நூல்கள் மட்டுமே.வடிவியல் முறைகளிலிருந்தும் பாபிலோனிய கணிதவியலிருந்தும் அவை மாறுபட்டவை.மேலும் இவர் தோராய தீர்வுகளுக்கு…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 ஆர்க்கிமிடீஸ் ( கி.மு.287 -212) 🌺 கிரேக்க கணித அறிஞர்களில் ஒருவரான ஆர்க்கிமிடீஸ் என்பவர் சிசிலியன் தீவிலுள்ள கிரேக்க நகரான சிராக்கூஸைச் சார்ந்தவர்.அவர் கி.மு.287 இல் பிறந்தார். ஒரு வட்டத்தின் உள்ளே அமைந்த ஒழுங்கு பலகோணம் மற்றும் வெளியே அமைந்த ஒழுங்கு பலகோணத்தைப் பயன்படுத்தி π – ன் மதிப்பைக் காண செவ்விய முறையை ஆர்க்கிமிடீஸ் தொடங்கினார்.கோளத்தின் பரப்பு மற்றும் கன அளவு காணச் சரியான சூத்திரங்களை கண்டறிந்த பெருமை அவரையே சாரும்.பரவளையப் பகுதி மற்றும்…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 யூலர்(1707 – 1783) 🌺 18 ஆம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்து நாட்டு கணித அறிஞர் யூலர் வாழ்ந்தார்.அவர் காலத்திற்கு முன்பும் பின்பும் அவரைப் போன்று யாரும் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் அதிகமாக எழுதியதில்லை.உலகைப் புரிந்து கொள்ள யூலருக்குக் கணிதம் புரிந்து கொள்ள யூலருக்குக் கணிதம் ஒரு கருவியாக இருந்தது.ஒவ்வொரு கண்டுபிடிப்பின் மூலமும் இயற்கையை புரிந்து கொள்வதில் ஒர் அடி நெருங்குவதால் அவர் உணர்ந்தார்.வடிவியல்…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 அல் – கரிஷ்மி ( 780 C.E. – 850C.E .) 🌺 அல் – கரிஷ்மி என்பவர் குறிப்பிடத் தகுந்த பழங்கால அரேபிய கணித மேதை ஆவார். இவர் இப்போதைய ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரில் பிறந்தவர்.கிதாப் அல் – ஜபர் வல் முகாபுலா என்ற இயற்கணித ஆராய்ச்சி கட்டுரை இவரின் முக்கியத்துவம் வாய்ந்த புகழ்பெற்ற கட்டுரை ஆகும். இவர் இந்து அரேபிய எண்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை எழுதியுள்ளார். இவர் சிந்து ஹிந்து என்ற…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 ஆரியபட்டா ( A.D.476 – 550) 🌺 நாம் இப்போது sine எனும் குறியீட்டை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ, அதே பொருளில் முதன் முதலில் பயன்படுத்தியவர் ஆரியபட்டா .கி.பி.500 -ல் அவர் எழுதிய ஆரியபட்டியம் எனும் கணித நூலில் sine எனும் குறியீடு காணப்படுகிறது.ஆர்யபட்டர் இந்தியாவின் மிகச்சிறந்த முற்காலக் கணித மேதைகளில் முதன்மையானவர். இவர் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் எனும் இடத்தில் வாழ்ந்தவர் ஆவர். இவர் கி.பி. 476 ஆம் ஆண்டு மார்ச் 21…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺டெஸ்கார்தே ( 1596 – 1650) 🌺 டெஸ்கார்தே நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் அறிவியல் வழியில் அறிவுபூர்வமாக ஒரு புதிய முறையை சிந்தித்தார். அதன் மூலம் இயற்பியலிலும் , வானவியலிலும் ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தினார்.டெஸ்கார்தே குறியீடுகளின் உதவியோடு பகுமுறை வடிவியலை எண் கணிதப்படுத்தி அதனை உயர்நிலைபடிகளைக் கொண்ட சமன்பாடுகளின் தொகுப்பாக்கினார். ஒரு புள்ளியை அதன் அச்சு தூரங்கள் என்று அழைக்கப்படும் இரு எண்களைக் கொண்டு குறிக்க முடியும் எனக் கண்டவர் டெஸ்கார்தே.