🌺டையோபாண்டஸ் ( கி.பி.200 – கி.பி.284) அல்லது ( கி.பி.214 – கி.பி. 298)
🌺சிர்க்கா என்ற நகரத்தில் வாழ்ந்த டையோபாண்டஸ் ஒரு ஹெல்லனிஸ்டிக் கணித அறிஞர் ஆவார்.அவர் வாழ்ந்த காலம் தெளிவாகத் தெரியாததால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.பதிமூன்று நூல்கள் அடங்கிய ஒரு கணிதப்புதையலான அரித்மெடிக்கா என்ற நூல்களின் தொகுப்பினை எழுதினார். ஆனால் அவற்றில் எஞ்சியுள்ளவை முதல் ஆறு நூல்கள் மட்டுமே.வடிவியல் முறைகளிலிருந்தும் பாபிலோனிய கணிதவியலிருந்தும் அவை மாறுபட்டவை.மேலும் இவர் தோராய தீர்வுகளுக்கு பதிலாக மிகச்சரியான தீர்வுகளை முதன்மைப்படுத்தினார். ஆகவே அரித்மெடிக்கா நூலானது கிரேக்க பாரம்பரிய கணிதவியலுடன் பொதுவாக இருந்தது.