🌺 தனிமையே இனிமை 🌺
உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ தனிமையையும் அமைதியையும் எப்போதும் விரும்புபவர். அவருடைய 90 – வது பிறந்த நாள் அன்று பிரான்ஸ் நாடு முழுவதும் அதை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் .
பிகாசோ வாழ்ந்து வந்த விலாரி கிராமமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் பிகாசோ தன் அறையில் கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு தனிமையில் அமர்ந்து அமைதியாக ஓவியம் தீட்டுக் கொண்டிருந்தார். அன்று முழுவதும் அவர் வெளியே வரவே இல்லை.