Tag: Stories
-
அறிவுக் கதை
ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது…. சற்று தூரத்தில் ஒரு துறவி கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார் காளிதாசர் அவரைப் பார்த்து ஜயா தாகமாகஇருக்கு…கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்….. அந்த துறவி தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த துறவிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி ஜயா என்றார்!…
-
அறிவுக் கதைகள்
🌺 உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன்…
-
அறிவுக் கதைகள்
🌺 மகாத்மாவின் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் 🌺மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். அவரைப் பேட்டி எடுப்பதற்காக குஜராத்தி பத்திரிகை நிருபர் ஒருவர் வந்தார். அவர், காந்தியடிகள் கப்பலை விட்டு இறங்கியதுமே அடுக்கடுக்காக கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.அவரைச் சற்று நேரம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த காந்தி, “நீங்களும் ஓர் இந்தியர், நானும் ஓர் இந்தியர். உங்கள் தாய்மொழி குஜராத்தி. என் தாய் மொழியும் அதுதான். அப்படியிருக்க, நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கத் துணிந்து ஏன்? தென் ஆப்ரிக்கா சென்று…
-
தனிமையே இனிமை
🌺 தனிமையே இனிமை 🌺உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ தனிமையையும் அமைதியையும் எப்போதும் விரும்புபவர். அவருடைய 90 – வது பிறந்த நாள் அன்று பிரான்ஸ் நாடு முழுவதும் அதை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் .பிகாசோ வாழ்ந்து வந்த விலாரி கிராமமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் பிகாசோ தன் அறையில் கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு தனிமையில் அமர்ந்து அமைதியாக ஓவியம் தீட்டுக் கொண்டிருந்தார். அன்று முழுவதும் அவர் வெளியே வரவே இல்லை.